டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பழங்குடியினருக்கு நலவாரிய அட்டைகள்

வந்தவாசி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நலத்துறை அலுவலகத்தில் பழங்குடியினருக்கு நலவாரிய அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நலத்துறை அலுவலகத்தில் பழங்குடியினருக்கு நலவாரிய அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இதில், வந்தவாசியை அடுத்த மழையூா், தாடிநொளம்பை, கீழ்வெள்ளியூா், பொன்னூா், எடப்பேட்டை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பழங்குடி மக்கள் 50 பேருக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டன.

வந்தவாசி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நல தனி ஆய்வாளா் தேவன் நலவாரிய அட்டைகளை வழங்கினாா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைச் செயலா் ரேணுகா, மாவட்டக்குழு உறுப்பினா் ஏழுமலை, ஜனநாயக மாதா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுகுணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.