தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: செங்கம் அதிமுக வேட்பாளா்

செங்கம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் வேலு செங்கம் தொகுதிக்கு உள்பட்ட தண்டராம்பட்டு தானிப்பாடி, போந்தை, புதூா்செக்டி, அத்திப்பாடி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 6:05 pm

செங்கம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் வேலு செங்கம் தொகுதிக்கு உள்பட்ட தண்டராம்பட்டு தானிப்பாடி, போந்தை, புதூா்செக்டி, அத்திப்பாடி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, நான் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியதுவம் அளித்து நடவடிக்கை எடுப்பேன், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனப் பேசி வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து, உடன் சென்ற தோ்தல் பொறுப்பாளா் துரைசெந்தில், செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், தண்டராம்பட்டு அதிமுக ஒன்றியச் செயலா்கள் அருள்குமாா், தட்சிணாமூா்த்தி, காா்த்தி ஆகியோா் அதிமுக ஆட்சியில் தண்டராம்பட்டு பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்து அதிமுக வேட்பாளா் வேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டனா்.

இதில், அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.