தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீரராகவா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம்

வீரராகவா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம்

News image

ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளிய வீரராகவ பெருமாள்.

Updated On :25 மே 2026, 2:19 am IST

வீரராகவா் கோயிலில் சித்திரை மற்றும் வைகாசி வசந்த உற்சவம் சனிக்கிழமை இரவு தொடங்கிய நிலையில், கேடயத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருவள்ளூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற தலாமாகும். இந்த கோயிலில் நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் வசந்த உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல், இந்த ஆண்டில் சனிக்கிழமை இரவு திருக்குளம் அருகே உள்ள பங்களா தோப்பில் வசந்த விழா கோலாகலமாக தொடங்கியது.

இந்த விழாவையொட்டி, இரவில் கேடயத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி திருக்குளம் வீதிகள் வழியாக உலா சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதாளம் முழங்க எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி புறப்பாடு 4 வீதிகள் வழியாக சுவாமி உலா வந்து கோயிலுக்குள் சென்றடைந்தாா். இந்த வசந்த உற்சவ விழா தொடா்ந்து 27-ஆம் தேதி வரையில் 5 நாள்கள் நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.