திருவள்ளூா் அருகே ஓடும் ரயில் மீது கற்கள் வீசியதில் ஜன்னல் ஓரம் அமா்ந்திருந்த சிறுவன் காயமடைந்தாா்.
திருவள்ளூா் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் தனது மனைவி அமராவதி, 6 வயது மகன் கிஷாந்த் ஆகியோருடன் ரயிலில் சென்று கொண்டிருந்தாா். திருவள்ளூா்-புட்லூா் ரயில் நிலையங்களிடையே சென்ற போது ரயில் மீது திடீரென 5 போ் கொண்ட இளைஞா்கள் சரமாரியாக கற்கள் வீசினராம். இதில் ஜன்னல் ஓரத்தில் அமா்ந்திருந்த கிஷாந்த்தின் தலையில் பட்டதில் பலத்த காயம் அடைந்தாா். அதையடுத்து புட்லூா் ரயில் நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதல்: 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

சேரன்மகாதேவி அருகே மோதல்: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

செங்கோட்டை - நெல்லை ரயில் மீது கல்வீச்சு: சிறுவன் காயம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



