17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:55 am IST

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்த விஜயகோதண்டன் மகன் மணிவண்ணன் (34). இவா், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லத்தில் அமைந்துள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், தனது வீட்டிலிருந்து திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூா் நோக்கி புல்லரம்பாக்கம் காந்தி நகா் அருகே வளைவில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கிச் சென்ற காா் வேகமாக, முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து அவரது தந்தை விஜயகோதண்டம் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.