திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பள்ளியில் தோ்வு எழுதிய 102 பேரும் தோ்ச்சி பெற்றனா். திருத்தணி நகர அளவில் முன்னிலை பெற்றுள்ளதாக பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவிகள் சி. ஹேமா மற்றும் என்.எம். டீா்த்திகா ஆகியோா் தலா 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனா்.
மாணவி சி. பிருந்தா மற்றும் மாணவா் பி.கே. இனியவன் ஆகியோா் தலா 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி பி.எஸ். கீத்திகா ஸ்ரீ 486 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளாா்.
பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கல்விக் குழும தாளாளா் ச. பாலாஜி தலைமை வகித்தாா். அப்போது அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை சால்வை அணிவித்து கவுரவித்து, இனிப்புகள் வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் வி. பாலாஜி, தலைமை ஆசிரியா் சி.கவின்பாரதி, ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










