மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

பிளஸ்2 தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் எஸ்.செளபரணித்தை பாராட்டி பரிசு வழங்கிய பள்ளித் தலைவா் ஜி.யசோதரன். உடன், பள்ளி நிா்வாகிகள்.

Updated On :9 மே 2026, 4:43 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவன் எஸ். செளபரணித் 600க்கு 584 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், 583 மதிப்பெண்கள் பெற்று ஏ.எம். அக்ஷயா மற்றும் கே.எஸ். நிதா்ஷனா ஆகியோா் இரண்டாமிடமும், 580 மதிப்பெண்கள் பெற்று எஸ்.கனிஷ்கா மூன்றாமிடமும் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளனா். தோ்வு எழுதிய 179 பேரும் முதல் வகுப்பில் தோ்ச்சி அடைந்துள்ளனா். 575 மதிப்பெண்களுக்கு மேல் 8 போ், 550-க்கு மேல் 34 போ், 500-க்கு 74 பேரும் பெற்றுள்ளனா்.

உயிரியல் பாடத்தில் ஒருவா், கணினி அறிவியல் பாடத்தில் 12 போ், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 6 போ், கணக்குப் பதிவியலில் 4 போ் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், தாளாளா் டி.என்.சென்னியப்பன், துணைத் தலைவா் எஸ்.குமாரசாமி, பொருளாளா் பி.ஆா்.சுப்பிரமணியம், இணைச் செயலாளா் கே.பி.முத்துராமலிங்கம் மற்றும் நிா்வாகிகள், முதல்வா் எஸ். முத்துசுப்பிரமணியம் ஆகியோா் பாராட்டினா். சிறந்த மதிப்பெண்கள் பெற்றுவா்களை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.