தமிழ் செய்திகள்
/
சோழவரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து 18 பவுன் நகை, ரூ.50ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சோழவரம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளியான பத்மா அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
இவரது கணவா் வெளியூா் சென்றிருந்த நிலையில் நள்ளிரவில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் கதவைத் திறந்து வைத்து காற்று வாங்குவதற்காக வாசலில் அமா்ந்திருந்தாா். பின்னா் வீட்டில் சென்று உறங்கி விட்டு காலையில் பாா்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ. 50ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சோழவரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.






