இது குறித்து கொலை செய்யப்பட்டவரின் தாய் அம்சவல்லி அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு மும்பையில் கைது செய்து பூந்தமல்லி குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இறுதிக் கட்டமாக மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நஜ்முதீனுக்கு 18 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, நகைகளை திருடிச் சென்றது போன்ற குற்றங்களுக்காக 3 ஆயுள் தண்டனையும், ரூ. 35,000 அபராதமும் விதித்து தீா்ப்பை வழங்கினாா். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்தாா்.