தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருத்தணி முருகன் கோயிலில் ராஜகோபுரப் பணிகள் மும்முரம்

திருத்தணி முருகன் கோயிலில், ராஜகோபுரம் கட்டும் பணியானது, ஒன்பது நிலைகள் முடிந்து தற்போது வண்ணம் பூசும் பணிகள்

News image
Updated On :1 நவம்பர் 2018, 10:44 pm


திருத்தணி முருகன் கோயிலில், ராஜகோபுரம் கட்டும் பணியானது, ஒன்பது நிலைகள் முடிந்து தற்போது வண்ணம் பூசும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 
அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வந்து, மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், முருகன் கோயிலுக்கு, ராஜகோபுரம் அமைக்கும் பணி, கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் 18-இல், இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில், 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரத்துக்கு, ஒன்பது நிலை ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கடந்த, 2011-க்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல்வேறு பிரச்னைகளால், கிடப்பில் போடப்பட்டன. இதையடுத்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின், கடந்த ஆண்டு, ஏப்ரல்-மே மாதத்தில் மீண்டும் ராஜகோபுர பணிகள் தொடங்கியது. ஆரம்பம் முதல் ராஜகோபுர பணிகள், துரித வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது, ஒன்பது நிலை கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இதுவரை மேற்பகுதியில் இருந்து மூன்று நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து, கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோபுர கல்ஹாரத்தின் மீது, ஒன்பது நிலை கோபுரங்கள் கட்டும் பணி முடிந்து, தற்போது ராஜகோபுரத்துக்கு வண்ணம் பூசும் பணியும் பொம்மைகள் அமைக்கும் பணியும் துரித கதியில் நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரை, 4 நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியும், மின் விளக்குகள், இடிதாங்கி கருவி அமைக்கும் பணியும் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து, கோபுரம் அருகில் கல்தரை அமைக்கும் பணி மற்றும் கோபுரம் வழியாக மலைக் கோயிலில் உள்ள தேர் வீதிக்கு பக்தர்கள் செல்வதற்கு படிகள் அமைக்கும் பணி ஓரிரு நாள்களில், திட்ட மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் விடப்பட்டு, மூன்று மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாத கடைசி வாரம் அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் ராஜகோபுரத்துக்கு குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.