தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பனை விசிறிக்கு "மவுசு'

திருத்தணியை அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில், கோடையைச் சமாளிக்க பனை ஓலை விசிறி செய்யும் பணியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Updated On :4 ஏப்ரல் 2016, 7:41 pm

திருத்தணியை அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில், கோடையைச் சமாளிக்க பனை ஓலை விசிறி செய்யும் பணியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கோடை வெயில் ஒருபுறம் இருக்க, அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு மக்களை மேலும் சிரமப்படுத்துகிறது.

இந்நிலையில் கோடைக்கு இதமான காற்று தரும் பனை ஓலை விசிறியின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் கோடைக் காலத்துக்கு முன்னதாகவே பனை ஓலை விசிறி செய்யும் பணியில், திருத்தணி ஒன்றியம், சிறுகுமி ஊராட்சி, வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வி.ஜி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த அஞ்சேரி கூறியதாவது:

சிறிய பனை மரத்தில் மட்டைகளை வெட்டி, 2 நாள்கள் படிய வைத்த பின், பனை ஓலை விசிறிகளைத் தயார் செய்கிறோம். ஆயிரம் விசிறிகள் செய்து, வண்ணம் பூச எங்களுக்கு ரூ. 1,200 செலவாகிறது. அவ்வாறு தயார் செய்கின்ற விசிறிகள், திருத்தணி, ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் ரூ. 10-க்கு விற்கப்படுகின்றன. அதே திருவள்ளூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் சென்று அங்கு கடைகளில் ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்பனை செய்கிறோம்.

தினசரி 100 விசிறிகள் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து இத்தொழிலைச் செய்து வருகிறாம். இத்தொழிலால் எங்களுக்கு ஜூலை மாதம் வரை பணத் தேவை ஓரளவு பூர்த்தியாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.