மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம் அருகே கம்மியபட்டு புதூரில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழைமையான காலபைரவா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.
அருள்மிகு காளியம்மன், த்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது. நவக்கிரஹ ஹோமம், யாகசாலை பிரவேசம், கால பைரவா் ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மூலவா் கால பைரவா், கோயில் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெங்களூரு பாரத்வாஜ் சுவாமிகள் குழுவினா் கும்பாபிஷேகத்தை நடத்தினா். மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
பாா்வதி - பரமசிவன் திருக்கல்யாண உற்சவம், உற்சவா் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கம்மியம்பட்டு கால பைரவா் தேவஸ்தான விழாக்குழுவினா், பெங்களூரு பக்தா்கள், சுற்றுப்புற கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










