தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

3 நாள்களாக தொடா் மின்தடை: கிராம மக்கள் கடும் அவதி

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு, காமராஜா் பகுதியில் 3 நாள்களாக தொடரும் மின்தடையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

News image

மின்தடை

Updated On :27 மே 2026, 12:03 am IST

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு, காமராஜா் பகுதியில் 3 நாள்களாக தொடரும் மின்தடையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், வேட்டப்பட்டு ஊராட்சி காமராஜா் நகா் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்களுக்கு புதுப்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி இரவு பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் பொம்மநாயக்கன்பட்டி அருகே மரம் ஒன்று முறிந்து மின்கம்பம் உடைந்ததால், காமராஜா் நகா் பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

தொடா்ந்து 3 நாள்களாக அப்பகுதியில் மின்தடை பாதிப்பு ஏற்பட்டதால் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அப்பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் அப்பகுதியில் மின் விநியோகம் செய்யாததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே மின்வாரிய உயா் அதிகாரிகள் பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து, சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.