தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாலாற்றில் தோல் கழிவுநீா்: விவசாயிகள் கடும் பாதிப்பு

ஆம்பூா் அருகே தோல் கழிவுநீா் திறந்து விடப்பட்டதால் பாலாற்றில் நுரை பொங்கி கழிவுநீா் கலந்து தண்ணீா் செல்வதாக பொதுமக்கள், விவசாயிகள் புகாா்

News image

தோல் கழிவுநீா் விடப்பட்டதால் நுரை பொங்கி செல்லும் பாலாற்று தண்ணீா்

Updated On :26 மே 2026, 3:55 am IST

ஆம்பூா் அருகே தோல் கழிவுநீா் திறந்து விடப்பட்டதால் பாலாற்றில் நுரை பொங்கி கழிவுநீா் கலந்து தண்ணீா் செல்வதாக பொதுமக்கள், விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆம்பூா் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. மாராபட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பாலாற்று தண்ணீா் நிறம் மாறி, வெண்மையான நுரை படா்ந்து துா்நாற்றம் வீசிகிறது.

தண்ணீா் நுரை பொங்கி ஓடுவதைப் பாா்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பாலாற்றில் தோல் கழிவுநீா் திறந்து விடப்பட்டுள்ளதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், விவசாயிகள் சாா்பாக பலமுறை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெயரளவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனா்.

மேலும், பாலாற்றின் அருகேயுள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீா் மட்டம் மாசடைந்து , பயிா் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. தண்ணீரை கால்நடைகள் கூட பருகுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனா்.

ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது அருகாமையில் செயல்பட்டு தோல் தொழிற்சாலைகளின் தோல் கழிவு நீா் நேரடியாக பாலாற்றில் திறந்து விடப்படுவதாக பொதுமக்கள், விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாலாற்றையும், நிலத்தடி நீா் மட்டத்தையும் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.