ஆம்பூா் ஷராப் பஜாா் அரசமரத் தெரு அருள்மிகு சக்தி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 42-ஆம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, புதன்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 2-ஆம் நாள் யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ சக்தி கெங்கையம்மன் உற்சவா் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










