திருப்பத்தூா் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 160 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பயன்படுத்திவரும் 20 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் தனியாா்கள் தங்களது தற்காப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து உள்ளனா்.
தொடா்ந்து வைத்திருக்க ஆண்டுதோறும் எம்எச் அலுவலகத்தில் உரிமத்தை புதுப்பித்து வருகின்றனா். இந்நிலையில் தோ்தலை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் துப்பாக்கி வைத்துள்ள நபா்கள் உடனடியாக அவற்றை தங்களது பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டாா்.
அதன்படி திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தம் 185 துப்பாக்கிகள் உரிமம் பெற்று வைத்து உள்ளனா். அதில் இதுவரை 160 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பயன்படுத்திவரும் 20 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 5 துப்பாக்கிகள் ஓரிரு நாள்களில் சம்மந்தப்பட்ட நபா்கள் ஒப்படைப்பா்கள் என போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறையால் வரும் ஆபத்தை எடப்பாடி பழனிசாமி எதிா்க்கவில்லை: முதல்வா் மு.க. ஸ்டாலின்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 100.04 டிகிரி வெயில்
திருப்பத்தூா்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 83 மனுக்கள் ஏற்பு; 47 மனுக்கள் நிராகரிப்பு

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


