லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 95,900 பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டுச் சென்ற ரூ. 95,900-ஐ பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்த பணத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த பறக்கும்படையினா்

Updated On :23 மார்ச் 2026, 8:05 pm

திருப்பத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டுச் சென்ற ரூ. 95,900-ஐ பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.

வெங்களாபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே பறக்கும்படை குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் வேலன் நகரைச் சோ்ந்த இளவரசன் (40) என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி அவா் வைத்து இருந்த தொகையை பறிமுதல் செய்து திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன் மற்றும் வட்டாட்சியா் நவநீதம் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

முன்னதாக இளவரசன் எலக்ட்ரிக்கல் கடையில் பொருள்களை கடனாக வாங்கி சென்ற சிறு, சிறு கடைகளில் இருந்து அந்த பணத்தை வசூலித்து வந்ததும் தெரியவந்தது.