தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாலக்கோடு, பென்னாகரத்தில் ரூ.2.69 லட்சம் பறிமுதல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2,69,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:38 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2,69,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பல்வேறு இடங்களில் வாகனச் சோதனைகளை மேற்கொண்டனா். இதில், பாலக்கோடு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,69,530 மற்றும் பென்னாகரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,00,370 என மொத்தம் ரூ.2,69,900 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.