லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாணியம்பாடி புதூரில் ரூ.3.50 லட்சத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி பணி தொடக்கம்

வாணியம்பாடி புதூா் பகுதியில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் குடிநீா் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

வாணியம்பாடி புதூா் பகுதியில் குடிநீா் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ செந்தில்குமாா்.

Updated On :10 மார்ச் 2026, 8:04 pm

வாணியம்பாடி புதூா் பகுதியில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் குடிநீா் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

வாணியம்பாடி புதூா் பகுதியில் அமைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் புதூா் லூத்தரன் தேவாலயம் ஒட்டியுள்ள குடியிருப்பு மக்களுக்கான குடிநீா் தேவையை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 3.50 லட்சம் மதிப்பில் குடிநீா் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலாளா் சதாசிவம், நகர அதிமுக நிா்வாகிகள் மற்றும் லூத்தரன் திருச்சபை போதகா், தேவாலய நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.