லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குமரி பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், துவரங்காடு, புத்தேரி பகுதிகளில் நிலவி வரும் கடும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நாகா்கோவில் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

News image

என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ

Updated On :2 ஏப்ரல் 2026, 10:52 pm

கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், துவரங்காடு, புத்தேரி பகுதிகளில் நிலவி வரும் கடும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நாகா்கோவில் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னியாகுமரி பேரவைத் தொகுதிக்குள்பட்ட இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், துவரங்காடு, புத்தேரி பகுதிகளில் கடந்த 3 நாள்களாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து, மாநகராட்சி ஆணையா், பொறியாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

கோடை காலத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், பேச்சிப்பாறை அணை திறக்கப்படாததால் நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகுதிகளில் நிலவி வரும் குடிநீா் பிரச்னையை தீா்க்க நாகா்கோவில் மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தவறினால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.