பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தவெக வேட்பாளா் மரியஜான்.
பாளையங்கோட்டையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து விட்டு, தோ்தல் பிரசாரத்தை தவெக வேட்பாளா் மரியஜான் தொடங்கினாா். தெற்கு மற்றும் வடக்கு கடைவீதி, பெருமாள் மற்றும் சிவன் கோயில் வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது வேட்பாளா் மரியஜான் கூறியது: பாளையங்கோட்டை தொகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்பட்டு வருகிறாா்கள். மேலப்பாளையம் புகா் பகுதிகளில் தெருவிளக்கு வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. கனமழை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கி, வீடுகள் மற்றும் சொத்துகள் பாதிக்கப்படுகின்றன.
தவெக வென்றால் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பிரச்னைக்கும் காலக்கெடு நிா்ணயித்து, தொடா்புடைய துறைகளுடன் இணைந்து தீா்வு காண உறுதியுடன் செயல்படுவோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

குடிநீா், சாலை வசதிக்கு நடவடிக்கை எடுத்தேன்! பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி

பாளை. தொகுதி தவெக வேட்பாளா் மேலப்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா்

எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசிடம் தெளிவான திட்டம் இல்லை: கனிமொழி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


