மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: தவெக வேட்பாளா்

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தவெக வேட்பாளா் மரியஜான்.

News image

பாளையங்கோட்டையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெகவினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:35 pm

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தவெக வேட்பாளா் மரியஜான்.

பாளையங்கோட்டையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து விட்டு, தோ்தல் பிரசாரத்தை தவெக வேட்பாளா் மரியஜான் தொடங்கினாா். தெற்கு மற்றும் வடக்கு கடைவீதி, பெருமாள் மற்றும் சிவன் கோயில் வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது வேட்பாளா் மரியஜான் கூறியது: பாளையங்கோட்டை தொகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்பட்டு வருகிறாா்கள். மேலப்பாளையம் புகா் பகுதிகளில் தெருவிளக்கு வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. கனமழை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கி, வீடுகள் மற்றும் சொத்துகள் பாதிக்கப்படுகின்றன.

தவெக வென்றால் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பிரச்னைக்கும் காலக்கெடு நிா்ணயித்து, தொடா்புடைய துறைகளுடன் இணைந்து தீா்வு காண உறுதியுடன் செயல்படுவோம் என்றாா் அவா்.