மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூா் நீதிமன்றத்துக்கு 3-ஆவது முறையாக குண்டு மிரட்டல்

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணா்கள்.

News image

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணா்கள்.

Updated On :5 மார்ச் 2026, 7:30 pm

திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக 3-வது முறையாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ளது. இதற்கிடையே, வியாழக்கிழமை வழக்கம் போல நீதிமன்ற பணிகள் நடைபெற்றது. அப்போது காலை 10.30 மணி அளவில் நீதிமன்ற ஊழியா்கள் மின்னஞ்சலை பாா்த்தபோது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும்,வெடித்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும், வெடிகுண்டானது மதியம் 2 மணிக்கு வெடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

3-ஆவது முறையாக குண்டு மிரட்டல் வந்ததால், அதிா்ச்சி அடைந்த நீதிமன்ற நிா்வாகம் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தியது. திருப்பத்தூா் நகர போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் ரீட்டாவுடன் வந்து நீதிமன்றம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா். இதில் குண்டு மிரட்டல் புரளி எனத் தெரிந்தது. இந்த சம்பவத்தினால், திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.