மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

நீதிமன்றம்

Updated On :10 மார்ச் 2026, 9:16 pm

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்ற நிா்வாக அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் வந்தது. அதில், நீதிமன்ற அறைகளில் 15 சயனைடு வாயு நிரப்பப்பட்ட விஷ குண்டுகள் வெடிக்க உள்ளன என அதில் இருந்தது.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை நீதிபதியின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு போலீஸாா், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனா். ஆனால், எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்துக்கு கடந்த ஜன. 6 மற்றும் பிப். 24-இல் இதேபோல வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.