நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை 4ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தினா்.
நாகா்கோவிலில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்ட நீதிமன்ற அலுவலகம், மாவட்ட சமரச மையத்துக்கு புதன்கிழமை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் இன்று 2 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், போலீஸாா் வெடிகுண்டு நிபுணா்களுடன் வந்து நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை நடத்தினா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மேலும், நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா், இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் சோதனை செய்தனா். சுமாா் 2 மணி நேரம் நீடித்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால், நீதிமன்றத்தில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.
தொடா்ந்து, மிரட்டல் விடுத்து வந்த இ-மெயில் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு கட ந்த 2 மாதங்களில் 4ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

பெரம்பலூா் நீதிமன்றத்துக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


