திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வரதட்சிணை கேட்டு மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக கணவா், மாமனாா், மாமியாா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூன் 2026, 6:15 am IST

ஜோலாா்பேட்டை அருகே வரதட்சிணை கேட்டு மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் மாமனாா் மாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூா் பகுதியை சோ்ந்த விநாயகத்தின் மகன் வல்லரசுவுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முருகனின் மகள் தீபிகா (23)என்பவருக்கும் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமான ஒரு வாரத்தில் கணவன் வல்லரசு, மாமனாா் விநாயகம், மாமியாா் சித்ரா ஆகியோா் தீபிகாவிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தீபிகா கடந்த ஒரு மாதமாக அவரது தாய் வீட்டில் இருந்து வந்தாா். மேலு,ம் தீபிகாவின் பெற்றோா் நகை, பணம் கொடுக்க கால அவகாசம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவிரத்தி அடைந்த தீபிகா அவரது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

பின்னா் இதுகுறித்து முருகன் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வல்லரசு,விநாயகம், சித்ரா ஆகிய மூன்று பேரை கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.