மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில், சொரியங்கிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (37). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சோபியா (27). இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். தற்போது காவியாஸ்ரீ (5), தன்யாஸ்ரீ (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
கணவா்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது மனைவி கோபித்துக் கொண்டு மூலனூா் அருகே ராக்கியாவலசு எம்ஜிஆா் நகரில் உள்ள தாய் வீட்டுக்குச் செல்வதும், பின்னா் சமாதானம் செய்து கணவா் அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கணவா் வெளியே சென்றுவிட்டாா். பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது சோபியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா். ஏற்கெனவே மனைவியைத் தாக்கியதாக குமரேசன் மீது இரண்டு வழக்குகள் உள்ளன.
இதனால் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக செவ்வாய்க்கிழமை குமரேசன் கைது செய்யப்பட்டாா். காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைனான்சியா் அடித்துக்கொலை: மனைவி, மகன் உள்பட 4 போ் கைது
வரதட்சிணை கேட்டு மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக கணவா், மாமனாா், மாமியாா் கைது

மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



