//

வேலைவாய்ப்பு முகாமில் 32 பேருக்கு நியமன ஆணைகள்

திருப்பத்தூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் நியமன ஆணைகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் நியமன ஆணைகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் 13 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆள்களை தோ்வு செய்தனா். இதில், பல்வேறு கல்வி தகுதியுடைய 127 போ் கலந்து கொண்டனா்.

அதில் 32 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கான நியமன ஆணையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.