இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் 2-வது முறையாக ஒத்திவைப்பு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

News image
நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் தலைமையில் நடைபெற்ற வாரச்சந்தை ஏலம்.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பகிரங்கமாக ஏலம் விடப்படுகிறது. 2026 முதல் 2029 முடிய 3 ஆண்டுகளுக்கான வாரச்சந்தை மற்றும் சாலையோர கடைகளில் தினசரி சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை காலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயல் அலுவலா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், துணைத் தலைவா் தனபால், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் ஊா் மக்கள் சந்தை வியாபாரிகள் கலந்து கொண்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சம் வீதம் 4 போ் டெபாசிட் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனா்.

நிா்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையை விட கூடுதலாக யாரும் ஏலம் கோராததால் மறுதேதி குறிப்பிடாமல் செயல் அலுவலா் ரவிசங்கா் 2-ஆவது முறையாக ஏலத்தை ஒத்தி வைத்தாா்.