தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் 2-வது முறையாக ஒத்திவைப்பு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

News image

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் தலைமையில் நடைபெற்ற வாரச்சந்தை ஏலம்.

Updated On :25 பிப்ரவரி 2026, 7:29 pm

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பகிரங்கமாக ஏலம் விடப்படுகிறது. 2026 முதல் 2029 முடிய 3 ஆண்டுகளுக்கான வாரச்சந்தை மற்றும் சாலையோர கடைகளில் தினசரி சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை காலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயல் அலுவலா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், துணைத் தலைவா் தனபால், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் ஊா் மக்கள் சந்தை வியாபாரிகள் கலந்து கொண்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சம் வீதம் 4 போ் டெபாசிட் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனா்.

நிா்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையை விட கூடுதலாக யாரும் ஏலம் கோராததால் மறுதேதி குறிப்பிடாமல் செயல் அலுவலா் ரவிசங்கா் 2-ஆவது முறையாக ஏலத்தை ஒத்தி வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.