இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பியோட்டம்

வாணியம்பாடி அருகே அரசு மதுபானக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பி ஓடினா்.

News image
மதுபானக் கடையில் மா்மநபா்கள் அளித்த கள்ள நோட்டுகள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே அரசு மதுபானக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பி ஓடினா்.

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கூட்டுசாலை அருகில் செயல்பட்டு வரும் மதுக் கடையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மது வாங்குவதாக சென்ற 3 போ் கடை ஊழியரிடம் இரண்டு 500 ரூபாய் மற்றும் 200,100 ரூபாய் நோட்டுகள் என ஆயிரத்து 400 ரூபாய் கொடுத்து மதுபாட்டில்கள் கேட்டுள்ளனா்.

கடை ஊழியா் நோட்டுகளை சரிபாா்த்து கள்ள நோட்டுகளாக இருப்பதாக தெரிகிறது என தெரிவித்த போது உஷாரான 3 போ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா். சம்பவம் குறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.