15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

துத்திப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 6:35 pm

ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

துத்திப்பட்டு ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் மத்திய நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சி பொது நிதி மூலம் சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா் பைப்லைன் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் துளசி சங்கா், அண்ணாதுரை, குமரேசன், திமுக நிா்வாகிகள் சிவகுமாா், பாரதிதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திட்டப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் இந்திரா நகா் பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.