நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
//

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
துத்திப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

துத்திப்பட்டு ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் மத்திய நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சி பொது நிதி மூலம் சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா் பைப்லைன் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் துளசி சங்கா், அண்ணாதுரை, குமரேசன், திமுக நிா்வாகிகள் சிவகுமாா், பாரதிதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திட்டப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் இந்திரா நகா் பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது.