15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.26- லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

News image

மோடிகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :10 மார்ச் 2026, 9:00 pm

குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.26- லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மோடிகுப்பம் ஊராட்சித் தலைவா் லாவண்யா ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10-லட்சத்தில் அமைக்கப்பட்ட வடிகால்வாய், ரூ.10- லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தாா். ரூ.6.50- லட்சத்தில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் டி.சிவா, புரட்சி பாரதம் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராஜ், ஊராட்சி துணைத் தலைவா் தனலட்சுமி, ஊராட்சி உறுப்பினா்கள் காளிதாசன், கோதண்டன், சீனிவாசன், தங்கமணி,ஷகிலாசலீம், தாமரைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.