மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வளா்ச்சிப் பணிகளுக்காக உடுமலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மு.ஜெயக்குமாா் பிரசாரம்

அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசில் உடுமலை தொகுதிக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன என்று வேட்பாளா் மு.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

News image

வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொள்கிறாா் வேட்பாளா் மு.ஜெயக்குமாா்.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:47 pm

அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசில் உடுமலை தொகுதிக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன என்று வேட்பாளா் மு.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

உடுமலை தொகுதி திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா், சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்

அப்போது அவா் பேசியதாவது: சாலை வசதிகளை மேம்படுத்த உடுமலை தொகுதி முழுவதும் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தில் காண்டூா் கால்வாய் பராமரிப்புப் பணிகள் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞா் கனவு இல்லங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரூ.13 கோடியில் பிஏபி கால்வாய்கள் பராமரிப்புப் பணி நடைபெற்று முடிந்துள்ளது. உடுமலை ஐடிஐ தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ரூ. 35 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.3 கோடியில் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு அவசர சிகிச்சை மேற்கொள்ள ரூ.3 கோடியில் ஒரு கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளன என்றாா்.