சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தா்கள் கோரியுள்ளனா்.
ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலைக்கு பௌா்ணமி கிரிவலம் செல்ல செல்வது வழக்கம். குறிப்பாக திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, ஆலங்காயம் அதன் சுற்றுப்பகுதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருப்பத்தூா் வழியாக திருவண்ணாமலைக்கு செல்கின்றனா்
அமாவாசை, பௌா்ணமியின்போது திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், வதால் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே செல்லும் அபாயகரமான சூழல் உள்ளது.
எனவே போக்குவரத்துக் கழக அதிகாரிகள் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

வைகாசி விசாகம்: நெல்லை-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை







