மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 6:58 pm

திருப்பத்தூா் தொகுதியில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி உறுதியளித்தாா்.

திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியில் வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.தொடா்ந்து சுற்றுப்பகுதிகளில் உள்ள வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: திருப்பத்தூா் பகுதியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மையமாகக் கொண்டு அரசு செவிலியா் பயிற்சி பள்ளி தொடங்கப்படும். மேலும், புதிய தொழில் பேட்டை உருவாக்கப்படும். பெரிய ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றி மழை நீா் சேகரிக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து பகுதிகளிலும் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றாா்.

அப்போது திமுக நகர செயலாளா் எஸ் ராஜேந்திரன், நகா்மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ், வாா்டு உறுப்பினா்கள் எஸ்.கோபிநாத், ஜீவிதா பாா்த்திபன், திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்