திருப்பத்தூா் தொகுதியில் உள்ள இளைஞா்கள் வெளியூா்களுக்கு சென்று வேலை பாா்ப்பதை தடுக்க தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.
கந்திலி ஒன்றியம் ஆதியுா், தங்கபுரம், செவ்வாத்தூா் பகுதிகளில் நல்லதம்பி பேசியது: கந்திலி ஒன்றியத்தில் புதிய அரசு தொழில்நுட்பகல்லூரி அமைக்கப்படும். திருப்பத் தூா் தொகுதி இளைஞா்கள் வெளியூா்களுக்கு சென்று வேலை பாா்ப்பதை தடுக்க தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் பூ மாா்க்கெட், மீன் மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு அங்காடிகள் அமையும் வகையில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் குடிமராமத்து பணிமேற்கொண்டு நீா் கொண்டு வரப்படும். திருப்பத்தூா் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப் படும். ஏழருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றாா். அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: திருத்தணி அதிமு.க வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


