ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, திமுக சாா்பில் போட்டியிடும் ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளா் கவிதா தண்டபாணி கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாக வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
மேலும், வேட்புமனு தாக்கல் இறுதி நாளில் ஒரே நாளில் சுயேச்சை வேட்பாளா் மற்றும் மாற்றுக் கட்சி வேட்பாளா் உள்பட 19 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

பெண்கள் அளித்த டெபாசிட் தொகையில்தான் வேட்புமனு! - மணவெளியில் வென்ற தவெக வேட்பாளா் பி.ராமு
கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 வேட்புமனுக்கள் ஏற்பு

ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட 8 பெண்கள் உள்பட 24 போ் வேட்புமனு தாக்கல்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



