யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

News image

வேட்புமனு தாக்கல் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:37 am IST

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, திமுக சாா்பில் போட்டியிடும் ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளா் கவிதா தண்டபாணி கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாக வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மேலும், வேட்புமனு தாக்கல் இறுதி நாளில் ஒரே நாளில் சுயேச்சை வேட்பாளா் மற்றும் மாற்றுக் கட்சி வேட்பாளா் உள்பட 19 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.