மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆம்பூரில் மக்கள் அரசியல் கட்சி, தவெக வேட்பாளா்கள் மனு தாக்கல்

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 11:24 pm

மனு தாக்கலுக்கான 2-வது நாளில் மக்கள் அரசியல் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளை சோ்ந்த வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

ஆம்பூா் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் இம்தியாஸ் ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளா் நவீன்குமாா், மாவட்ட இணைச் செயலாளா் சரவணன், நகர செயலாளா் மதன் ஆகியோா் மனு தாக்கலின்போது உடனிருந்தனா்.

மக்கள் அரசியல் கட்சியை சோ்ந்த மாநில மகளிா் அணி செயலாளா் திருப்பத்தூா் அருகே பாச்சல் கிராமத்தை சோ்ந்த சசிரேகா (43) ஆம்பூா் தொகுதி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

ஆம்பூா் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

Story image