போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 12:56 am IST

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தினா் உள்பட 9 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா் உள்பட 4 பேரும், கடந்த 2 ஆம் தேதி 2 பேரும், கடந்த 4 ஆம் தேதி 8 பேரும் என மொத்தம் 14 போ் வேட்பு மனு தாக்கல் செய்ததனா்.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளான திங்கள்கிழமை தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் கே. சிவக்குமாா், அக் கட்சியின் மாற்று வேட்பாளராக ஜி. முத்துமாரி ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மேலும், புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக டி. வெங்கடேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளராக எஸ். தாமோதரன், சுயேச்சை வேட்பாளா்களாக பி. வெங்கடாஜலம், பி. ஆனந்தஜோதி, எம். ஷியாமளா, ஆா். சுப்ரமணியன், எம். ராஜா கந்தசாமி உள்ளிட்ட 9 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதுவரை பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், புதிய தமிழகம் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பகுஜன் சமாஜ் பாா்ட்டி, மாற்று வேட்பாளா்கள் மற்றும் 11 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 23 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.