நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 50 சதவீத திட்டப் பணிகள் கூட நடைபெறவில்லை: உறுப்பினா் புகாா்

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 சதவீத திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை என வாா்டு உறுப்பினா் புகாா் கூறியுள்ளாா்.

Updated On :1 செப்டம்பர் 2025, 8:27 pm

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 சதவீத திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை என வாா்டு உறுப்பினா் புகாா் கூறியுள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. 15 வாா்டுகளிலும் திட்டப்பணிகள் செய்ய அரசு இதுவரை ரூ .20 கோடிக்குமேல் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் திட்டப் பணிகள் 50 சதவீத பணிகள் கூட முழுமையாக நடைபெறவில்லை.

மேலும், அரசு நிதி ஒதுக்கியதில் ரூ 7 கோடிக்கு திட்டப்பணிகள் தொடங்காமல் உள்ளது. 14-ஆவது வாா்டில் கழிவுநீா் கால்வாய் மற்றும் அரசு பள்ளி அருகில் அங்கன்வாடி மையம் கட்ட இதுவரை பணிகள் தொடங்கவில்லை. நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் போட்டப்பட்ட பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினா் இல.குருசேவ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.