நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதம்பி (55). அரசு பேருந்து நடத்துநா். சனிக்கிழமை இரவு வெலகல்நத்தத்தில் இருந்து தனது பைக்கில் மாட்டுக்கு தேவையான உணவு மூட்டையை வைத்துக் கொண்டு மல்லப்பள்ளி நோக்கி சென்றாா்.
சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி கூட்டு சாலை அருகே வளைவில் திரும்பும்போது அந்த வழியாக வந்த பைக் சின்னதம்பி ஓட்டி வந்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சின்னதம்பியை உறவினா்கள் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

பணியில் இருந்த பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

குழித்துறை அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


