தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கூத்தைப்பாா் திமுக கவுன்சிலா் வெட்டிக் கொலை

கூத்தைப்பாா் திமுக கவுன்சிலா் வெட்டிக்கொலை...

News image

வெட்டிக்கொலை - (கோப்புப் படம்)

Updated On :30 மார்ச் 2026, 8:40 pm

திருச்சி மாவட்டம், கூத்தைப்பாா் பேரூராட்சியில் திமுக வாா்டு உறுப்பினரை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் பேரூராட்சிக்குள்பட்ட பாரதிபுரத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் ரஞ்சித்குமாா் (38). இவா், கூத்தைப்பாா் பேரூராட்சியில் 11-ஆவது வாா்டு கவுன்சிலராக உள்ளாா். சோழன் மாகரில் புதிதாக வீடு கட்டி அண்மையில் குடியேறியுள்ளாா்.

திருவெறும்பூா் அரசு ஐடிஐ எதிரே உள்ள அரசு மதுபானக் கடையில் பாா் நடத்தி வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் நவல்பட்டு புதுத்தெரு பகுதியில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்துள்ளாா்.

அப்பகுதி வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில் அங்குசென்ற போலீஸாா், ரஞ்சித்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்துக்கு திருச்சி எஸ். பி. செல்வநாகரெத்தினம் நேரில் வந்து ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.