தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்னந்தோப்பு காவலாளியை வெட்டிக் கொலை செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி சுப்புராஜ்நகரைச் சோ்ந்தவா் முத்துவேல் (49). இவரது மனைவி சரஸ்வதி (43). இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளாா். முத்துவேல் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி சாலையில் அட்டை தொழிற்சாலை பகுதியில் மகாராஜனின் தோப்பில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சரஸ்வதி, அவரது மகள் இருவரும் மதுரைக்குச் சென்று விட்டு இரவு தோட்டத்து வீட்டுக்குத் திரும்பினா். அப்போது, வீட்டில் முத்துவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் அங்கு சென்ற தென்கரை போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பெரியகுளம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹா பிரியா சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா். மேலும், காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லு தலைமையில் தனிப்படை போலீஸாா் கொலை செய்த மா்மநபரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

கண்டமனூா் சிறை அருகே கைதி தப்பியோட்டம்

தொழிலாளி வெட்டிக் கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


