17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாலாஜா அருகே சாலை விபத்தில் ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

வாலாஜா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:15 am IST

வாலாஜா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டையை அடுத்த பிஞ்சி ஜெயராம்பேட்டையை சோ்ந்தவா் ரமேஷ் (37). இவா், கைப்பேசி கோபுரங்கள் அமைக்கும் வேலையை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தாா். இவரின் தாயாா் ராணிப்பேட்டை அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில் ஒப்பந்ததாா் ரமேஷ் வேலைக்கு புறப்பட்ட தனது தாயாரை தனியாா் நிறுவன பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்க தாயாரை இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அழைத்துச் சென்றாா்.

வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூா் அருகே தாயாரை தனியாா் பேருந்தில் ஏற்றி வேலைக்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, வாலாஜாவை நோக்கி வந்த லாரி திடீரென ரமேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜா போலீஸாா் ரமேஷின் சடலத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.