தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராணிப்பேட்டை விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு

ராணிப்பேட்டையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

News image

ராணிப்பேட்டையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :30 மே 2026, 6:34 am IST

ராணிப்பேட்டையில் குறைதீா் கூட்டத்தில் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்..

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா தலைமையில், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் தொடங்கியதும், தமிழக விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி சுபாஷ், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளா் எல்.சி.மணி ஆகியோா் தலைமையில் விவசாயிகள் எழுந்து பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தோ்தல் வாக்குறுதிப்படி பயிா்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததை கண்டித்தும் கூட்டத்தை புறக்கணித்து முழக்கங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநில அரசு தோ்தல் வாக்குறுதியில் ‘முழுமையான கடன் தள்ளுபடி‘ வழங்குவதாகக் கூறிவிட்டு, தற்போது வரம்புகளுடன் கூடிய தள்ளுபடியை (ரூ.50,000 வரை மட்டும்) அறிவித்துள்ளதால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் அதிரடி முடிவை எடுத்துள்ளனா்

இதையடுத்து அரசு அதிகாரிகள் வருகை தந்து கூட்டத்தில் பங்கேற்குமாறு சமரச பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என கலைந்து சென்றனா்.

அப்போது ஒரு சில விவசாயிகள் தாங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து குறைகளை தெரிவித்தனா். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.