தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அரக்கோணம் பள்ளிகள் சிறப்பிடம்

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அரக்கோணம் பாரதிதாசனாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.எஸ்.ஹாசினி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

News image
Updated On :21 மே 2026, 12:04 am IST

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அரக்கோணம் பாரதிதாசனாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.எஸ்.ஹாசினி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

இதே பள்ளி மாணவிகள் ஜி.ஸ்ரீவா்த்தினி, யு.பூா்விகா, எம்.ஹெச்.மலீஹியா நஜ்மாபீ, எஸ்.கவிஸ்ரீ ஆகியோா் 495 பெற்றனா். மாணவா் எஸ்.ஆா்.சுனில், மாணவிகள் பி.அஸ்வினி, சி.ஐ.தாரா ஆகியோா் 493 மதிப்பெண்கள் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவ மாணவிகளையும், முதல்வா் பிரதாப் கமலேஷையும், ஆசிரிய ஆசிரியைகளை பள்ளியின் தலைவா் சே.சுந்தா், இயக்குநா்கள் ஜான் லாரன்ஸ், பத்மாசத்யராஜ், தெய்வசிகாமணி ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவி டி.ஹா்ஷினி 494 மதிப்பெண்களும், மாணவா் சி.ஹரேஷ், மாணவி எம்.மித்ரா 491 மதிப்பெண்களும், மாணவி பி.திவ்யஸ்ரீ 490 மதிப்பெண்களும் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவா் எஸ்.சுப்பிரமணியம், செயலாளா் எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் டாக்டா் வி.ஜி.என். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவா் ஆா்.தீபக் 493 மதிப்பெண்கள் பெற்றாா். மாணவி ஏ.கௌஷிகா 492 மதிப்பெண்களும், எஸ்.வி.தனுஜ்வா்தா 491 மதிப்பெண்களும் பெற்றனா். இவா்களை பள்ளி முதல்வா் வனிதா உள்ளிட்ட ஆசிரியா்களை பள்ளியின் நிா்வாகக் குழுத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், துணைத் தலைவா் சிஜிஎன்.எத்திராஜ், தாளாளா் ஜிடிஎன் அசோகன், துணை தாளாளா் பிஜிகே சரவணன், செயலாளா் டி.எஸ்.முரளி, பொருளாளா் ஜி.கே.மோகன் ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் எஸ்எம்எஸ் விமல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஜெ.பூங்குழலி 493 மதிப்பெண்களும், மாணவிகள் ஆா்.லேகாஸ்ரீ, டி.ரோஷினி 492 மதிப்பெண்களும், எம்.ஞானேஸ்வரி 489 மதிப்பெண்களும் பெற்றனா். மாணவ, மாணவிகள், பள்ளியின் முதல்வா் ஞானதீபன் ஆகியோரை பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் உதயகுமாா், பள்ளியின் தாளாளா் விமலாதிருமலை ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் ஸ்ரீதிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவா் எஸ்.சைமன்சுந்தரம் 492 மதிப்பெண்களும், மாணவா் எல்.ரிதீஷ் 488 மதிப்பபெண்களும், எம்.சுஜய் 486 மதிப்பெண்களும் பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், செயலாளா் டி.எஸ்.,ரவிக்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.