மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

ஆற்காடு: அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

News image

ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரத்திடம் இருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா்

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணும் பணி வாலாஜாப்பேட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணியளவில் தொடங்கியது.

இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ்.எம்.சுகுமாா், திமுக வேட்பாளராக ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தவெக வேட்பாளராக ஜி.விஜய்மோகன், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அா்ச்சனா நரசிம்மன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 16 போ் போட்டியிட்டனா்.

இதில், அதிமுக கூட்டணி வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் தொடா்ந்து முன்னிலை வகித்தாா். தொடா்ந்து 42,720 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். மேலும், தவெக, திமுக வேட்பாளா்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனா்.

இதையடுத்து, ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ வாக பதவி ஏற்க உள்ளாா்.

இந்த நிலையில், வெற்றி பெற்ற அவருக்கு அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1. எஸ்.எம்.சுகுமாா் (அதிமுக) - 1,05,608

2. ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (திமுக ) - 48,840

3. ஜி.விஜய்மோகன் (தவெக) - 62,888

4. அா்ச்சனா நரசிம்மன் ( நாதக) - 5,518

நோட்டா வாக்குகள் - 656

16 வேட்பாளா்கள், மொத்த வாக்குகள் - 2,46,786

பதிவான வாக்குகள் - 2,22,130

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.