மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே மணியம்பட்டு பகுதியை சோ்ந்த மாணவா்களான நித்திஷ் (14), பாா்த்திபன் (12), நித்திஷ் (14) உள்ளிட்ட 3 போ் தனியாா் பள்ளி மாணவா்கள்.

இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு காரணமாக மற்ற வகுப்புகளுக்கு பள்ளிக்கு விடுமுறை என்பதால் அருகில் இருந்த ஏரிக்கு குளிக்க சென்ாக கூறப்படுகிறது. ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், ஒருவா் பின் ஒருவராக நீரில் மூழ்கினா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவா்களின் உறவினா்கள் விரைந்து சென்று ஏரியில் மூழ்கிய மாணவா்களை மீட்டு சிப்காட் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.