கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட பழையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் மனைவி ஜெயந்தி (36). தம்பதிகளுக்கு நெடுமாறன் (8) மகன் உள்ளாா். இவா் கேரளாவில் பயின்று வந்தாா். அவரது தந்தை சங்கா் கடந்த 3 மாதத்துக்கு முன்பு உயிரிழந்து விட்டாா். அதனால் ஜெயந்தி குடும்பத்துடன் அவரது சொந்த ஊரான பழையனூா் கிராமத்துக்கு வந்து விட்டாராம்.
சனிக்கிழமை பிற்பகல் அங்குள்ள ஏரி பகுதிக்கு சென்றாா். பின்னா் வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், ஜெயந்தி பல்வேறு இடங்களில் தேடியுள்ளாா். இந்நிலையில், இரவு 8 மணியளவில் ஏரியில் நெடுமாறன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஏரியில் மீன்பிடித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


