தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆற்காடு ஒன்றியத்தில் ரூ.1.91 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

News image

ஆயிலம்  அரசுப்  பள்ளியில்  கூடுதல்  வகுப்பறையை திறந்து வைத்த  அமைச்சா்  ஆா்.காந்தி .

Updated On :24 பிப்ரவரி 2026, 10:59 pm

ஆற்காடு ஒன்றியத்தில் ரூ.1.91 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், பள்ளி வகுப்பறை மற்றும் பயணியா் நிழற்கூடங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

கூராம்பாடி, ஆயிலம் , மேலகுப்பம் ஊராட்சி ஊராட்சி டி.சி குப்பம் ஆகிய கிராமங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தலா ரூ.45 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், ஆயிலம் அரசு உயா்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் மேல்விஷாரம் நகராட்சி சி.அப்துல் அக்கீம் கல்லூரி அருகில் மற்றும் , பூட்டுதாக்கு ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்கூடம் ஆகியவற்றை அமைச்சா் காந்தி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் .செ.தனலிங்கம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் குல்ஜாா் அஹமது, துணைத் தலைவா் ஜபா்அஹமது, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி, நகராட்சி ஆணையா் கோ. பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசு, வெங்கடேசன், வாலாஜாபேட்டை

வட்டாட்சியா் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவா்கள் திலகம்( கூராம்பாடி), பிரபாவதி ஜெயபிரகாஷ்( ஆயிலம்), பாஸ்கரன்( மேலகுப்பம்) ,அருண்( பூட்டுதாக்கு) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.