தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆற்காட்டில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலை, புதிய சாலை: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலையை திறந்து வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.

News image
Updated On :14 மார்ச் 2026, 12:50 am

ஆற்காடு நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் உருவ சிலை மற்றும் புதிய காமராஜா் சாலையை அமைச்சா் ஆா். காந்தி திறந்து வைத்தாா்.

ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் உருவ சிலை மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காமராஜா் சாலை திறப்பு விழாவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா்.

ஆற்காடு எம்எல்ஏ, ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காமராஜா் உருவச் சிலை மற்றும் புதிய சாலையை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா். விழாவில் மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், மகாத்மா காந்தி அறக்கட்டளை துணைத் தலைவா் பென்ஸ்பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், காமராஜா் அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொணடனா். நகா்மன்ற உறுப்பினா் அனு அருண்குமாா் நன்றி கூறினாா்.

ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆற்காடு ஒன்றியம், தாழனூா் கிராமத்தில் அமைச்சா் ஆா்.காந்தி தனது சொந்த நிதிமூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தாா்.

ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஏ.வி.நந்தகுமாா், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் பி.சங்கா், ஏ.ஜெயகுமாா், ஒன்றிய திமுக இளைஞா் அணி அமைப்பாளா் பி.மோகனம், நேரு இளைஞா் நற்பணி மன்றத் தலைவா் சுகன்பூபதி மற்றும் மன்ற நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.